Month: August 2015

உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்கிற நிலையில் தமிழ் மக்கள் இல்லை

இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்கால குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் நடத்தக்கூடிய உள்ளக விசாரணைக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனால்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தெரிவித்துள்ளது. ‘உள்ளக விசாரணைகள் மூலம் அறிக்கைகள் வரலாம்… ஆனால் ஒரு நியாயம் கிடைக்கும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை’ என்று புளொட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்…

எதிர்க்கட்சித் தலைவர் பதவி  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ?

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக முறைப்படி தங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தர வேண்டுமென கூட்டமைப்பு கோரியுள்ளது. இன்று அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இரண்டாவதாக அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இரு…

ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனைகள் நிறுத்தப்பட்டன

இலங்கையின் வடக்கே, வவுனியாவுக்கு அப்பால் ஏ-9 வீதியில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச்சாவடியின் சோதனை நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஏ-9 வீதியூடாக நாட்டின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கும் தெற்கிலிருந்து வடக்குக்கும் பயணிக்கும் பயணிகளின் வசதி கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ஓமந்தை இறம்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடி யுத்த மோதல்கள் நடந்த காலம் தொட்டு இயங்கி வந்துள்ளது. யுத்த காலத்தில், இரண்டு நாடுகளுக்கிடையிலான சோதனைச்சாவடியைப் போன்று இங்கு சோதனைகள் நடந்துவந்தன. வாகனங்கள் பதிவு…

கனடியரான ‘மொஹமட் வாஹ்மி’க்கு எகிப்தில்  3 வருடச் சிறை

கனடியரான ‘அல்-ஜஸீரா’ ஊடகவியலாளர் ‘மொஹமட் வாஹ்மி’க்கும் அவரது சகாக்களுக்கும்  3 வருடச் சிறைத் தண்டனை இன்று கெய்ரோ நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘மொஹமட் வாஹ்மி’  14 மாதங்களைச் சிறையில் கழித்திருந்தார். இந்தச் செய்தி கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மொஹமட் வாஹ்மி’ , ‘பீட்டர் கிரெஸ்டே’ மற்றும் ‘பாஹிர் மொஹமட்’ ஆகிய மூவரும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினருக்கு உதவியதாகவும் பொய்யான செய்தியை வெளியிட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனுமதி பெறாமல்  ஒளிபரப்புக் கருவிகளைப் பயன்படுத்திச் செய்திப்…

என்.டி.பிக் கட்சி ஆட்சி அமைக்கும் – புதிய கருத்துக் கணிப்பு

என்.டி.பிக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று புதிய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. அந்தக் கணிப்பின் பிரகாரம் 40 சத வீதமானவர்கள் என்.டி.பிக் கட்சிக்கும் 30 சத சத வீதமானவர்கள் லிபரல் கட்சிக்கும் 23 சத வீதமானவர்கள் கொன்சர்வேட்டிவ் கட்சியினருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்தக் கணிப்பில் 1440 கனடியர்கள் பங்கெடுத்துள்ளனர். Forum Research என்ற நிறுவனமே இந்தக் கருத்துக் கணிப்பினை நடத்தியுள்ளது. இதன் படி என்.டி.பிக் கட்சி 174 ஆசனங்களை வெல்லக் கூடியதாக அமையும்.…

தேசிய அரசாங்க பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  இதனால் அன்றைய தினம் நடத்த…

சமூக ஆய்வாளர் சாந்தி சச்சிதானந்தம் காலமானார்

அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழலை காலமானார். நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார். கொழும்பு – 07 டொரின்டன் அவனியுவிலுள்ள விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிருந்தார். விழுதுகள் மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரான சாந்தி சச்சிதானந்தம் மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில்…

ஒன்றுபட்டால் எதிர்க்கட்சியாகத் தமிழர் கட்சி – நினைத்தது நடக்கும்!

இலங்கையில் சிறப்பாக நிறைவாகியுள்ள தேர்தலின் பின்னான அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பல சுவையானவை. இலங்கையில் இருப்பது போன்ற உன்னதமான தேர்தல் முறை கனடாவில் கூட இல்லை. இதனைப் பலரும் – நமது கனடியத் தமிழ் அரசியல்வாதிகள் உட்பட அறிந்திருப்பார்கள் என்று நம்பலாம். விகிதாச்சார தேர்தல்முறை என்று அறியப்பட்ட விழுக்காட்டு முறையில் அமைந்த தேர்தல் முறையே மக்களாட்சித் தேர்தலின் உச்சம்! அது இலங்கையில் உள்ளது. இந்த வகையில் பிற நாடுகளின் தேர்தல் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் நேர்மையாகவும் அமைதியாகவும் நடந்தேறிய…

இராசநாயகம் சந்திரம் – மரண அறிவித்தல்

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் சந்திரம் அவர்கள் 24-08-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,காலஞ்சென்றவர்களான சந்திரம்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், மேதினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், மேனன், ஷாஷினி, ஜனா ஆகியோரின் அன்புத் தந்தையாரும், இராமச்சந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற இராஜேஸ்வரி(இலங்கை), இராஜலட்சுமி(ஜெர்மனி), இராஜதுரை(ஜெர்மனி), இந்திராதேவி(கனடா), திலகவதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தேவரூபன், ஸ்முரூடி, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும், கலாவதி(டென்மார்க்), மாணிக்கமாதகலார்(கணேஷ் சொக்கலிங்கம்- அவுஸ்திரேலியா), யோகன் சொக்கலிங்கம்(கனடா), பஞ்சொக்கலிங்கம்(கனடா), செல்வரட்ணம்(லண்டன்),…

அந்தோனிப்பிள்ளை யாக்கோ ஜேக்கப் – மரண அறிவித்தல்

யாழ். பருத்தித்துறை சென் அன்ரனிஸ் லேனைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலினை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை யாக்கோ ஜேக்கப் அவர்கள் 21-08-2015 வெள்ளிக்கிழமையன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் பொன்னையா சிசிலியா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும், மரியறோஸ் அவர்களின் அன்புக் கணவரும், அனிற்ரா, லியானா, சந்திரகுமார், திருக்குமார், சசிக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தங்கராஜா, யகுலா, மற்றும் சந்திரா, ராணி, ரவிலங்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும், இந்திரலிங்கம், டன்சன்,…