ஜேர்மனி-நெதர்லாந்து சிநேகபூர்வ உதைபந்தாட்டம் நிறுத்தப்பட்டது!

ஜேர்மனி-நெதர்லாந்து சிநேகபூர்வ உதைபந்தாட்டம் நிறுத்தப்பட்டது!

ஜேர்மனியின் ஹனோவர் மைதானத்தில் ஜேர்மனிக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் தற்பொழுது நிகழவிருந்த நட்புரீதியான  உதைபந்தாட்டப் போட்டி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சில மணிநேரத்துக்கு முன் கிடைக்கப் பெற்ற குண்டு அச்சுறுத்தலால் மைதானத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று பாரீஸ் தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்டவராககக் கருதப்பட்ட ஒருவரைக் கைது செய்வதற்கான முயற்சியில் பிரெஞ்சுப் பொலீஸார் செயற்பட்டுவரும் சூழ்நிலையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர், அரங்கிலிருந்த ரசிகர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

ஜெர்மனிய அரச தலைவி ஏங்கலா மெர்க்கல்  இந்த கால்பந்து போட்டியை பார்வையிட இருந்தார். இது தவிர இசை அரங்கு ஒன்றிலிருந்தவர்களும் அங்கிருந்து வெளியெற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே லண்டன் வெம்பிளி விளையாட்டு அரங்கில் இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் துவக்கத்தில் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் இரு அணிகளின் ரசிகர்களும் பிரெஞ்ச் தேசிய கீதத்தை பாடினர்.

 

Share This Post

Post Comment