இளம்பாடகரும் இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர், 12.12.2015 சனிக்கிழமை பிராம்டன் நகரிலுள்ள Powerade Centre இல் நிகழ்த்த இருக்கும் தனது இசைநிகழ்ச்சியில் சேரும் நிதியினை தமிழகத்தில் சம்பவித்த வெள்ளப் பேரனர்த்த நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“வை திஸ் கொலவெறி டி” பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் உலகின் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமான இவர் “3”, டேவிட், இரண்டாம் உலகம், வேலையில்லாப் பட்டதாரி, மாரி ஆகிய திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.