Day: September 17, 2022

திருமலையில் வீட்டுத்தோட்டம் அமைக்க உதவி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் கப்பல்துறை, பீலியடி, மாங்காய் ஊற்று,கன்னியா, இலுப்பைக்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள, ஐந்நூறு ( 500) வறிய குடும்பங்களுக்குத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் 300,000.00 உரூபா பெறுமதியான வீட்டுத்தோட்டம் செய்வதற்குரிய நாற்றுகளையும் விதைகளையும் இன்று (2022.09.10) வழங்கியது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் இந்த உதவிகளை வழங்கி வைத்தார். பட்டணமும் சூழலும்…

கனடியத் தமிழர் நிதிசேர் நடை நிதி இலக்கு எட்டப்பட்டது

தாயக உறவுகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உதவி வழங்க  கனடியத் தமிழர் பேரவையினால் நடத்தப்பட்ட கனடியத் தமிழர் நிதிசேர் நடையின் நிதி இலக்கு 50,000 கனடிய டொலர்கள் எட்டப்பட்டது. கனடியத் தமிழர் பேரவை நிதிசேர் நடை ஏற்பாடு குறித்து வெளியிட்ட அறிக்கை : “இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக–பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளது. ஒருகாலத்தில் வலுவாக இருந்த சுகாதார அமைப்பு வீழ்ச்சியைநோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மின்சாரப் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறைஆகியவற்றால்…

ரூபி மார்க்கம் கல்விச்சபைக்கு போட்டியிடுகிறார்

ரூபி இரட்ணசிங்கம் மார்க்கம் கல்விச்சபை வேட்பாளர் ( 5&7 வட்டாரங்கள்) ஒன்ராறியோ மாகாண சமூகசேவை ஊழியராகவும், ஆரம்பப் பாடசாலைக் கல்வியாளராகவும் கடைமையாற்றிய ரூபி, மார்க்கம் நகரில் தற்போது வசித்து வருகிறார். இவர் நீண்ட காலமாக சமூகசேவைகளில் ஈடுபட்டுவரும் பின்னணியை உடையவர். இவர், கடந்த 23  ஆண்டுகளாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினருக்காக அரச நிறுவனங்கள் பலவற்றில் கடைமையாற்றியதோடு யோர்க் பிராந்திய சமூக சேவை அமைப்புக்கு ஊடாகப் பல இளைஞர் திட்டங்களையும் உருவாக்கியிருக்கிறார். ரூபி இரட்ணசிங்கம் மார்க்கம் சமூகத்தினருக்கு…

மூன்றாவது உலக மனிதநேய சமூக நீதி மாநாடு

மூன்றாவது உலக மனிதநேய சமூக நீதி மாநாடு ! சமூக நீதி பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா, கனேடிய மனிதநேய அமைப்புக்களுடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றது. ரொறொன்ரோ, ஸ்காபுரோவில் அமைந்துள்ள சென்ரானியல் கல்லூரியில் செப்ரெம்பர் 24 காலை 9 முதல் இரவு 9 வரையும், செப்ரெம்பர் 25 காலை 9 முதல் மாலை 5 வரையும் இம் மாநாடு இரண்டு நாட்கள் இடம்பெறும். மானமிகு ஆசிரியர் வீரமணி, தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின்(இணையவழி), கனடிய…