திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் கப்பல்துறை, பீலியடி, மாங்காய் ஊற்று,கன்னியா, இலுப்பைக்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள, ஐந்நூறு ( 500) வறிய குடும்பங்களுக்குத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் 300,000.00 உரூபா பெறுமதியான வீட்டுத்தோட்டம் செய்வதற்குரிய நாற்றுகளையும் விதைகளையும் இன்று (2022.09.10) வழங்கியது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் இந்த உதவிகளை வழங்கி வைத்தார். பட்டணமும் சூழலும்…
திருமலையில் வீட்டுத்தோட்டம் அமைக்க உதவி
