Category: Literature

நடுகல் நாட்டப்பட்டிருக்கிறது!

இன்று எனக்குஎந்த ஓட்டமும் கிடைக்கவில்லைஎனது தொலைபேசிமணி ஒலிக்கவுமில்லைஓட்டம் கேட்டுஎந்தக் குறுஞ்செய்தியையும்யாரும்எனக்கு அனுப்பியிருக்கவில்லை ஓட்டம் கிடைக்கும் போதெல்லாம்பயணிக்கும் மனிதர்களோடுஅளவளாவும்தருணங்கள் தோறும்எனது மகனின் கதையைச்சொல்லுகிறேன் கல்லறைக்குச் சென்றுஅவனை வழிபட்டஆத்மார்த்தம்அதனால் கிடைக்கிறது பிரிவுத்துயரத்தினால்நள்ளிரவில்நான் எழுப்பிய கதறல்கள்எனக்கு அளித்த விடுதலையைஅந்த உரையாடல்களும்அளிப்பதாகச் சொன்னால்யார்தான் நம்புவார்கள் ? என்னிடம் ஓர் நாள்நீமீண்டும்உயிர்த்தெழுந்து வருவாய்என நான்நம்பிக்கொண்டிருப்பதையார்தான் நம்புவார் ? எங்கும் எதிலும்உன்னை நான்காண்பதையார்தான் உணர்வார் ? உன் முகத்திலிருந்துவழிந்து விழும்புன்முறுவலைஇறுகப்பற்றியபடிநான் எழுந்திருக்கமுயன்றிருக்கின்றேன் உன் நினைவுகளைப் பற்றியபடிஎன்னவோ எல்லாம்செய்ய முயன்றிருக்கின்றேன் உன்னை எரிக்க மனம் ஒவ்வாதுபுதைத்திருக்கின்றேன்அந்தப் புதைகுழியில்நடுகல்…

செயற்பாடுகள்

ந.முரளிதரன் அறிக்கை விரிந்து கிடக்கிறதுஅதன் ஒவ்வொரு சொற்களும்போவோர் வருவோர்அனைவரையும்விழித்துப் பார்க்கிறதுஎழுதியவர்கள் அதனைமறந்து போயிருந்தனர்ஒப்பம் இட்டோர்மறுதலை நிலைப்பாட்டுக்குவந்திருக்கலாம் அத்துமீறலுக்கும்அடக்குமுறைக்கும்சுரண்டலுக்கும் எதிராகஎவ்வளவு சொல்லாடல்களைஉதிர்த்திருப்போம் போராளிகளாய்எழுத்தர்களாய்உரைஞர்களாய்விமர்சகர்களாய்நாடகர்களாய்மறுத்தோடிகளாய்எங்களை வரித்துக்கொள்வதில்எவ்வளவு வாஞ்சையோடிருந்தோம் வரலாறு குத்துக்கரணம் அடித்துஎமது பிடரியில்அறைந்து உலுக்குகிறது ஆனாலும் தொடர்ச்சியானஎமது போராட்டத்தின்ஒரு படிக்கட்டமாக“இது” என்று ஓங்கியுரைத்துமனிதனின் உச்சந்தலையில்சம்மட்டி அடி போட்டுகுருதி கொப்பளித்துப்பாய்வதைக்கண்டு குதூகலிக்கிறதுஎம் மனம் செயற்பாட்டாளர்கள் …நீங்கள் அனைவரும்தேடிக்கொண்டிருக்கிறீர்களா ?தத்துவம் தெரியாதசிந்தாந்தம் புரியாதஅந்த எளிய மனிதர்களைநீங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை அவர்கள் வீதிகளிலும்குடிசைகளிலும்தோட்டங்களிலும்வேலைத்தலங்களிலும்சிறைகளிலும் என்று..இன்னும் இன்னும்எல்லா இடங்களிலும்செயற்பட்டபடி…! அவர்கள் அறிக்கை எழுதுவதில்லைதீர்மானம் முன்மொழிவதில்லைமாநாட்டில் உரைப்பதில்லை…

அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்

அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள் -அ.ராமசாமி- மானுடவியல் அறிஞர் விக்டர்டர்னர் ‘சடங்கிலிருந்து அரங்குக்கு’ (From Ritual To Theatre) என்றொரு புகழ் மிக்க சொற் றொடரைப் பயன்படுத்தியுள்ளார். சடங்குகளிலிருந்து தான் நாடகக்கலை உருவாகியது என மேற்கத்தியச் சிந்தனை களும்  அதன் வழியான ஆய்வுகளும் சொல்லியுள்ளன. உலகத்திலுள்ள நாடகப் பள்ளி களும் நாடக ஆர்வலர்களும்  ஓரளவு அது உண்மைதான் என ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த ஒத்துக் கொள்ளலின் பேரில் அரங்கச் செயல்பாடுகளுக்கு-குறிப்பாக நடிப்புக்கான பயிற்சிகளுக்கு- மரபான சடங்குநிகழ்வுகளோடு…

உன் அழைப்பிற்கு நன்றி. – சக்கரவர்த்தி

உன் அழைப்பிற்கு நன்றி. ==================== -சக்கரவர்த்தி- இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும்…

எஸ்.பொவின் “சடங்கு” நாவல் குறித்து எழுத்தாளர் அ.ஜேசுராசா!

சடங்கு -அ.ஜேசுராசா-        மறைந்தும் மறையாத மூத்த எழுத்தாளர்எஸ்.பொ. நினைவாக, அவரது சடங்கு நாவலை எடுத்து இரண்டு நாள்களாக வாசித்தேன். 1966 ஆம் ஆண்டு சுதந்திரன் வாரப் பத்திரிகையில் தொடராக வந்த அந்த நாவல், 1971 இல் கொழும்பு அரசு வெளியீடாக நூல் வடிவில் வெளிவந்துள்ளது. அப்போது வாசித்ததற்குப் பின்னர், நீண்ட இடைவெளியின் பிறகு இப்போதுதான் வாசித்தேன். எனக்கு நன்கு பிடித்தது; முக்கியமான நாவல் என்ற உணர்வு. வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்…

கவிஞன் கவிதை: நிலம், போர், காதல்

-மண் குதிரை- இலங்கைத் தமிழ்க் கவிதைகள், இந்தியத் தமிழ்க் கவிதைகளிலிருந்து வேறுபட்டவை. புதுக்கவிதை பிறப்பதற்கு முன்பான இந்தியத் தமிழ்க் கவிதைகளுடன் இலங்கைத் தமிழ்க் கவிதைகளுக்கு உறவு உண்டு. அந்தக் காலகட்டத்திய மரபின் தாக்கத்தை இலங்கைத் தமிழ்க் கவிதைகளும் பிரதிபலித்தன. ஆனால் புதுக்கவிதை பிறந்ததற்குப் பிறகான இந்தியத் தமிழ்க் கவிதைகளின் நிலை வேறு. அவற்றில் மரபின் பாதிப்பு உள்ளடக்கம் ரீதியாகவும் மெல்லக் குறைந்து இன்று கிட்டத்தட்ட இல்லாமல் ஆகியிருக்கிறது. மாறாக இலங்கைத் தமிழ்க் கவிஞர்கள் மரபை உள்வாங்கி தங்கள்…

கில்லர் பரிசு ரொறொன்ரோவைச் சேர்ந்த ஆந்திரே அலெக்ஸிசுக்கு!

இவ்வருடத்துக்கான Scotiabank Giller பரிசு, ரொறன்ரோவைச் சேர்ந்த André Alexis அவர்களின் Fifteen Dogs என்ற நாவலுக்குக் கிடைத்துள்ளது. கனடாவின் சிறந்த புனைகதையாளருக்கு வருடா வருடம் வழங்கப்படும் இந்த பரிசுக்காக, இம்முறை 168 சமர்ப்பிப்புக்கள் கிடைத்திருந்தன. சர்வதேசரீதியான ஐந்து நடுவர்களைக் கொண்ட குழு, ரொறன்ரோ மிருக வைத்தியசாலை ஒன்றிலுள்ள 15 நாய்களுக்கு மனித உணர்வுகள் இருந்தால் எப்படியிருக்கும் என்பதை உள்ளார்ந்தமாகவும் தத்துவார்த்தமாகவும் ஆராயும் இந்த நாவலை பரிசுக்குரிய நாவலாக தெரிந்திருந்தது. நவம்பர் மாதம் 10ம் திகதி நிகழ்ந்த…

ஸ்காபுரோவில் 7.11.2015 சனியன்று வெங்கட் சாமிநாதன் நினைவு நாள் நிகழ்வில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் ஆற்றிய உரையின் ஒரு பகுதி!      

வெங்கட் சாமிநாதன் காலமானார்!

-‘பதிவுகள்’ வ.ந.கிரிதரன்- திரு.வெங்கட் சாமிநாதன் மறைந்தார். தமிழ்க் கலை, இலக்கிய உலகின் தவிர்க்க முடியாததோர் ஆளுமை சரிந்தது! தொடர்ந்து அதிர்ச்சியான இழப்புச் செய்திகளாகவே வருகின்றன. தமிழ்க்கலை, இலக்கிய உலகில் முக்கிய ஆளுமைகளிலொருவரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் மறைந்தாரென்ற செய்தியினை முகநூலில் முகநூல் நண்பர்களிலொருவரும், எழுத்தாளருமான அண்ணா கண்ணன் அவர்கள் பகிர்ந்திருந்தார். கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். எதையும் வெளிப்படையாக, தர்க்கரீதியாக வெளிப்படுத்தி எழுதும் தன்மை வாய்ந்தது அவர்தம் எழுத்து. அவரது…

யார் யாரைப் புறக்கணிக்கிறார்கள் ?

-அரவிந்தன்- நவீன தமிழ் இலக்கியவாதிகள் திராவிட இலக்கியவாதிகளை புறக்கணிப்பதாக வைரமுத்து தன் சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழ்ந்ததா என்பதைப் பார்க்கும் முன், வேறொரு விடயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக இங்கே திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. அரசு அதிகாரம், மாபெரும் கட்சி அமைப்பு, பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களின் மீதான செல்வாக்கு ஆகிய அனைத்தும் அமையப் பெற்றவர்கள் திராவிடக் கட்சிகளின் பிரதிநிதிகள். மாறாக, நவீன இலக்கியவாதிகள் என அறியப்படும்…